மேட்டர் நமக்கு ஒரு ஜாலியான   மேட்டர் , ஆனா மிருகங்களுக்கு மேட்டர் is a luxurious  மேட்டர்  . நீங்க எளிதாக கதவை  சாத்திட்டு , லைட்ட நிறுத்திட்டு ( இல்லநிறுத்தாம ) ஜாலியா கில்மேடிக்ஸ் பண்ணுவீங்க , ஆனா மிருகங்களுக்கு அதுஒரு adventure மாதிரி . நினைச்சு பாருங்க போர்களத்துல  எதிரிகள் சூழ்ந்த இடத்துக்கு நடுவே உங்கள மேட்டர் பண்ண சொன்னா உங்களுக்கு எப்படி   இருக்கும்   ? அப்புடி ஒரு உறுப்பு இருக்குறதே உங்களுக்கு மறந்து போய்விடாது  ?
 
ஆனா தடைகளைத் தாண்டி ,வெற்றி கொடி நாட்டினா  (!) தானே ஒரு பெருமிதம்?
அப்புடி என்ன டாக்டர் தடைகள் இருக்கு ?ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, பல தடைகள்.
முதல் தடை :  

வேற யாரும் இல்ல , இணையிடம் இருந்து வரும் தடை சூப்பர் figure ,கிட்ட போய் தொட்டா , கத்தியால் குத்திடுவா ,... அவளோட நீங்க கூடுவீங்களா ?ஆனா தன்னோட சந்ததி நல்லா இருக்கணும்னு , உயிரை "முடி" யா நினைச்சு ,கூடுற தியாகிகளை என்னனு சொல்றது ?

 

படிக்க … தயிர் சிலுப்பி மற்றும் சிலந்தி மேட்டர்
அதுவும் சில வகை சிலந்திகளில் உருவத்தில்  பெரிதாக இருக்கும் பெண் சிலந்தி , தனது வலையில் எது வந்தாலும் சரி ருசித்து சாப்பிட்டு விடும் , அதுவும் உருவத்தில் சிறிய ஆண் சிலந்தி வந்தாலும் அதுக்கு உடல் பசியை விட வயிற்று பசி தான் பெரிதாகத்  தெரியும் , ஆனா ஆண்களுக்கு அப்புடி இல்லை , எப்படியாவது ( செத்தாலும் ) மேட்டர் பண்ணிவிட வேண்டும் என்ற துடிப்பு



அதுனால " முனியம்மா நான் தான் கபாலி வந்துருக்கேன் " என்கிற ரீதியில் முதலில் பெண் சிலந்தி வலையை வெளியில் இருந்து லைட்டா ஆட்டி விடும் , சிலர் இன்னும் புத்திசாலி தனமாக கையோடு ஒரு இரையை கொண்டு போய் பெண்களுக்கு gift ஆ கொடுப்பாணுவ , ( அப்ப தானே பெண் சிலந்தியோட வாய் பிஸியா இருக்கும் , அந்த நேரத்துல பையனும் பிஸியா வேலைய காட்ட முடியும் ) ,( பாருங்க மக்களே பொண்ணுங்களுக்கு gift  குடுக்குற பழக்கம் எப்புடி ஆரம்பிசுருக்குனு )



இன்னும் சில அப்பாடக்கருங்க ( Crab  spider ) என்ன பண்ணுவானுங்கனா...  நம்ம spider  man மாதிரி கம் விட்டு பெண்கள கட்டி போட்டுடுவானுங்க , அப்புறம் ?
"போட்டுடுவானுங்க" . 
[எனக்கு ஒரு சந்தேகம் , spider man னுக்கு எப்புடி   கைலேர்ந்து கம் வருது ? பட்டக்ஸ்லேருந்து தானே வரணும்  , ஏன்னா சிலந்திக்கு பின்னாடி இருந்து தானே கம் வருது? - ஆனா சிலந்தி கம் ஒரு ஸ்பெஷல் ஆன வஸ்து , சில வகை கம்மூலமா குண்டு துளைக்காத உடையெல்லாம் செய்றாங்க தெரியுமா ?   ]

மயிலு தானே நமக்கு தெரிஞ்சு தோகைய ஆட்டி இணையை கவரும் , மயில் சிலந்தின்னு ஒரு வகை சிலந்தி தனது தோகையை ( தோகை மாதிரி உள்ள பட்டக்சை) ஆட்டி இணையை கவரும்
 



ஏற்கனவே சொன்ன மாதிரி புலி சிங்கத்துக்கு எல்லாம் முள் குஞ்சு ( குஞ்சரமல்லர்  1  )
அதனால மேட்டர் முடிஞ்சு வெளிய எடுக்கும் போது கீரிகிட்டு வரும் , அதுனால பெண் சிங்கம் ( கலைங்கரோட பெண் சிங்கம் இல்ல ) டென்ஷன்  ஆகி சண்டைக்கு வந்துடும்.
அடுத்த தடைகள்  , அத அடுத்த பதிவுல பாப்போம்.
                                                                                                                                 - Dr. Dolittle 


இவர் மேலும் கூறுகிறார் ...

5 கலந்துரையாடல்கள்

டாக்டர் பச்சை குத்துதல்ன்னா என்ன ?
ரொம்ப எளிதா புரியணும்னா கீழ உள்ள படத்த பாருங்க

(மோசன் போற எடத்துல பேசன் ? நாடு கெட்டு  போச்சுப்பா) 
இன்னும் புரியல ?

இப்ப புரிய வைக்கிறேன்
இப்ப புரிஞ்சுதா ?( இதுக்கு மேல புரியலன்னு சொல்வீங்க ?)
ஓகே , பச்சை குத்துதல் தற்போது நாகரீகத்தின் வெளிப்பாடாக பார்க்கபடுகிறது
ஆனா history வேறு விதமா சொல்லுது .( std ன்னா வரலாறு தானே)

புராண கால tattoo –
எனக்கு தெரிஞ்சு முத முதல்ல tattoo குத்தினது இவருதான் (நோட் தி தும்பிக்கை )


 
அப்புறம் கற்காலம் :
நம்ம ஊர்லயும் இது இருந்திருக்கு பச்சை குத்துதல்,மருதாணி என்று பலவாறாக
..

இப்ப மாடர்ன் உலகத்துல இது பேசன் ஆயிடுச்சு
   
 

ஓகே , இதனால் தாங்கள் கூற விரும்பும் கருத்து:
god கடிச்சு , மனுசன கடிச்சு , கடைசில இப்ப அனிமல்சையும் கடிக்க ஆரம்பிச்சுடுச்சு இந்த tattoo    
ஒரு பெரிய பண்ணைல நிறைய மாடுங்க இருக்கும் , அவைகள அடையாளப்படுத்த tattoo குத்துவாங்க ,
அதுக்கு இப்புடி சூடு வைப்பாங்க
இல்ல இப்புடி-196 டிகிரி உள்ள திரவ நைட்ரஜன் மூலம்    ஐஸ்  வைப்பாங்க ( இதுக்கு சூடே வைக்கலாம் )


 
இல்ல ஊசி ஊசியா நம்பர் செட் பண்ணி பச்சை குத்துவாங்க

வட நாட்ல வைத்தியம் பாக்கும் போது அடிக்கடி மாட்டு உடம்புல வித்யாசமான சிம்பல்ல சூடு போட்ட தழும்பு இருந்துச்சு , என்னடா இதுன்னு கேட்டேன் , அது ஒரு வகையான வைத்தியமாம் , நம்ம ஊர்லயும் பழங்காலத்துல இத பின்பற்றி இருக்காங்க ( source  தஞ்சாவூர் சரஸ்வதி மகால்  புக்ஸ் ).

இதெல்லாம் ஓகே , ஒரு தேவைக்காக பண்றாங்க , ஆனா Vim  Delvoye ன்னு ஒரு சீனா பன்னி, இவன் பெரிய டிராயர்  ,  உண்மையான பன்னிகுட்டிங்க உடம்புல tattoo   குத்தி அது பெருசான உடனே ,பன்னிய கொன்னுட்டு  , கறிய அவன் சாப்டுடுவான் . அப்பா தோலு ? அத வித்துடுவான் .


அத போய் யாரு டாக்டர் வாங்குவா ?
நீங்கல்லாம் அத வாங்க முடியாது , ஒரு பீஸ் 10 ,௦௦௦  டாலர் குடுத்து  ( நமக்கு முருகன் டாலரே போதும் ) அத வாங்க பொழுது போகாத தொழிலதிபர்கள் இருக்காங்க ( நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்க முடியலப்பா ).
கேட்டா ஆர்ட்டாம்



சரி பன்னியோட நிருத்துனானுவலா? , இல்லையே    , pet  tattooing  ஒரு பெரிய பேசனா வளர்ந்து வருது
நாய் பூனைக்கெல்லாம் tattoo

parrot  பிஷ்  ன்னு ஒரு மீனு , விக்காம கிடந்துச்சு , என்ன பண்ணலாம் ?குத்துடா tattoo ...



கொடுமைய நீங்களே பாருங்க கலர் எறும்பு , கலர் கோழிகுஞ்சு ,கலர் ஆமகுஞ்சு …அடப்பாவிகளா…

னக்கு  தெரிஞ்சு அனிமல்சுக்கு tattoo  குத்துன முதல் ஆளு யார் தெரியுமா


ஒரு விஷயம் சொல்றேன் காத குடுங்க , நம்ம ஊரு அணிலுக்கு 3 கொடுத்தானே , ஆனா வட நாட்டு அணிலுக்கு 5 கொடு ,
 
(வடக்கு வாழ்கிறது ?) யு டூ ராமா ?

 கடைசியா ஒரு விஷயம் , நாம எல்லோரும் போட வேண்டிய tattoo எது தெரியுமா ?
……?  
இவர் மேலும் கூறுகிறார் ...

5 கலந்துரையாடல்கள்


நண்பேன்டா

நான் பதிவு எழுதுவது என் நண்பர்களுக்கு கூட தெரியாது . என் நெருங்கிய நண்பன் ஒருவனிடம் ," மச்சி நம்ம சுப்ஜெக்ட் பத்தி ஒருத்தன் interesting ஆ (?) எழுதி இருக்கான் பாரேன் " ன்னு சொன்னேன் , படிச்சு பாத்துட்டு ,நல்லாருக்கு மச்சி(?), இத எழுதுனன்னு நீ தானே சொன்னான், சத்தியமா இல்ல மச்சி ன்னு சொன்னேன், அதுக்கு அவன் ," உன் சத்தியத்துல சாணிய கரைச்சு ஊத்து , உன்னோட slang தான் இந்த கட்டுரைல அப்பிடியே தெரியுதேடா , ஆனா என்னைக்கு உன்னோட அண்ணன் கைல சிக்குரியோ அன்னைக்கு இருக்குடா உனக்கு ஆப்பு', அப்புடின்னு சொன்னான் { எங்க அண்ணன் ஒரு பிரபல blogger (அப்பிடினு அவனே சொல்லிக்குவான் )}. அதுனால நானும் இனிமே டீசன்ட்டா பதிவு எழுதலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் ( அது எல்லாம் உன்னால முடியாது நாயே ) .

இந்திய blog வரலாற்றிலேயே முதல் முறையாக ,மெகா பவர் ஸ்டார் Dr .Dolittle (இது வேறயா ?) மேட்டர் பத்தி எழுதாத Decent பதிவு உங்கள் குலேபகாவலியில் மட்டும் , இது durex வழங்கும் விளம்பரதாரர் நிகழ்ச்சி ( ஆமா டாக்டர் அனிமல்சுக்கு காண்டம் இருக்கா - அது குஞ்சரமல்லர்கள் பார்ட் 4 ல வரும் , இது Decent பதிவு ஆமா சொல்லிபுட்டேன் ) .

__________________________________________________________________________________


விலங்குகளின் நட்பு மற்றும் தாய் பாசம் போன்றவற்றின் முன்பு மனிதர்களாகிய நாம் பிச்சை வாங்க வேண்டும் , இவற்றை பற்றி ஆயிரம் பதிவுகள் போடலாம் .முதலில் நடுப்புகாக ..

.

நண்பேன்டா 1 :

கோபியும் இறாலும்

கோபி என்றவுடன் நம்ம ஊர் கோபியை நினைகாதீர்கள் , இது ஒரு வகை மீன் இனம் watchmen or prawn gobies என்று இவற்றுல் ஒரு வகை மீன் இனம் உண்டு , பையனுக்கு பார்வைத்திறன் அதிகம் , ஆனால் கைவசம் ஒரு வித்தையும் இல்லை, சொந்தமாக ஒரு குடிசை கூட கிடையாது , எதிரி யாரவது வந்தால் எதிர்த்து சண்டை போட தெரியாது , மொத்தத்தில் இவன் ஒரு care of platform . pistol shrimp என்று ஒரு வகை இறால் , இவன் ஒரு கடும் உழைப்பாளி , நல்ல body , ஆனால் பாவம் இவனுக்கு பகலிலேயே பசு மாடு தெரியாது , வடிவேலுவை பார்த்தால்"தம்பி நீங்க MGR மாதிரி தக தக ன்னு மின்னுரீங்கன்னு " சொல்லற டைப்.

நம்ம சங்க கால இரட்டை புலவர்களை பற்றி இவன்கள் கேள்விபட்டிருபார்கள் போல , இவன்களும் அவர்களைப்போல ஒரு காவிய நடப்புக்கு எடுதுக்காட்டகிவிட்டார்கள் , இந்த இறால் பையன் ,கோபிக்கும் இவனுக்கும் சேர்த்து ஒரு அழகான + பாதுகாப்பான பதுங்கு குழியை அமைத்து குடுப்பான் , இந்த கோபி பையன் வாசலில் watchman போல தேவுடு காத்து இருப்பான் .இவன்கள் தங்களுக்குலேயே தொடுதல் மூலம் ஒரு பாஷையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் ,

யாரவது எதிரி வந்தால் இந்த கோபி பையன் தனது துடுப்பு மூலம் இறால் பையனின் உணர்கொம்புகளில் தட்டி " தம்பி உஷாரு " என்று அலெர்ட் செய்வான் . 

பின்னர் இருவரும் குழிக்குள் சென்று பதுங்கி கொள்வார்கள் .இறால் இரை தேடுகிறேன் பேர்வழி என்று வழி தவறி விட்டால் கூட , நம்ம கோபி போய் பத்திரமா வீட்டுக்கு கூடியாந்துடுவான்


.

ஆனால் வாட்ச்மனுக்கு எப்பவுமே ஆபத்து அதிகம் , அதுனால அந்த கோபி அதுக்கு என்ன செஞ்சான் தெரியுமா ?

Evalution மூலமா ஒரு peculiar ஆன உடலமைப்ப உருவாக்கக்கிட்டான். மேல உள்ள படத்துல இருக்குற கோபிய நல்லா பாத்தீங்கன்னா அவன் கண்ண ஒரு கொடு மூலமா மறைச்சுருக்குறது தெரியும் , முதுகு மேல உள்ள துடுப்புல ஒரு பொய் கண்ண வசுருக்குறதும் தெரியும் .

எதிரிங்க எப்பவுமே தலைய தான் அடிக்கும் ,தூரத்துல இருந்து பாக்குற எதிரிங்களுக்கு இந்த false eye spot அ பாத்து தலைன்னு நினச்சு துடுப்ப அடிக்கும் , அதுக்குள்ள நம்ம கோபி உடனே சுதாரிச்சு (தெரிச்சு) உள்ள ஓடிடுவான் .

இந்த டெக்னிக்க பல பயலுக follow பண்றானுவ.

இவனுங்க எல்லாம் butterfly மீன்கள் . இவன் படக்சுல பொய் கண்ண வச்சுருக்கான், உண்மையான கண்ண கொடு போட்டு மறைச்சு வச்சுருக்கான். 



இவன் catterpillar (கூட்டுப்புழு) இது இவனோட உண்மையான கண்ணு கிடையாது படக்சுல இருக்குற பொய் கண்ணு .

இது பரவா இல்ல , இந்த பட்டாம் பூச்சி பய இருக்கானே இவன் படக்சுல ஒரு பொய் தலையயே வச்சு இருக்கான் பாருங்க.

இவன் கூட பரவாஇல்ல இந்த moth பையன் ஆந்தை கண்ணு மாதிரி ரெக்கைய வச்சு ஆக்டிங் குடுக்குறத பாருங்க
 ...

எல்லாம் ஓகே டாக்டர் , அது எப்புடி அதுக்கு படக்சுல கண்ணு வந்துச்சு ?(படக்சுல ஆய் தானே வரணும் )

ஞாயம் தான்…ok, உங்க பக்கத்துக்கு வீட்ல ஒரு அழகான பாப்பா இருக்கு , அத பாக்கலாமுன்னு காம்பவுண்டு சுவர எட்டி பாக்குறீங்க , ஆனா சுவர் உயரமா இருக்கு , இருந்தாலும் விடா முயற்சியோடு வருஷக்கணக்காக எட்டிப்பாக்குறீங்க , உங்களுக்கபுறம் உங்க பையன்( அவனுமா ?? ), அவன் பேரன்னு பரம்பரபரம்பரயா எட்டி பாக்குறீங்க ( த்தூ ... இதெல்லாம் ஒரு பொழப்பு ) . ஒரு கட்டத்துல evalution மூலம் உங்க கழுத்து கொஞ்ச கொஞ்சமா வளந்து சுவர விட நீளமாயிடும்(!).


ய்ய்ய்.... இவள பாக்கவா பரம்பரபரம்பரயா காத்து இருந்தோம்

அது போல தான் , இந்த பெடக்சுல கண்ணு matter( இன்னும் நிறைய அதிசயங்கள் இது போல இருக்கு , வேறு ஒரு தொடர் மூலம் ( எத்தன ? ) அதை பற்றி அப்புறம் பார்ப்போம் ) ஒரு உயிரினத்தின் உயிரை/சந்ததியை எதிரியிடம் இருந்து காத்து கொள்ள or அதன் சந்ததி தழைத்தோங்க evalution மூலம் அது தனது உருவத்தில் மாற்றத்தை கொண்டு வருகிறது .

ஒரு "முடி"யும் புரியல டாக்டர்,

Freeஆ விடுங்க ,

உங்களுக்கு mutation மூலமாவோ அல்லது வேறு எதன் மூலமாவோ கைல கண்ணு ( gun இல்ல )வருதுன்னு வச்சுக்குவோம் , அது உங்க இனத்தோட survival லுக்கு துணையா இருந்துச்சுனா அதை இயற்கை சந்ததி சந்ததி யா வர அனுமதிக்கும் ( அது உங்களுக்கு சற்றே தீங்கு விளைவித்தாலும் ) . எடுத்துக்காட்டு - sickle cell anemia in African population (இது ஒரு பெரிய கதை , நல்லா இருக்காது , அதுனால விட்ருவோம் ).

கைல கண்ணு இருந்தா எப்புடி டாக்டர் நன்மை பயக்கும் ,

பயக்கும் .... கைல கண்ணு இருந்தா …

1.தலைய திருப்பாம பரீட்சை ஹால்ல கைய நீட்டி காப்பி அடிக்கலாம்

2.முதுகு அரிச்சா கையா நீட்டி ஏன் அரிக்குதுன்னு பாத்துக்கலாம்

3.போர்க்களத்துல பதுங்கு குழியில எதிரியின் வருகையை கைய நீட்டி பாத்துக்கலாம்

4.சந்துல காசு விழுந்தா கைய நீட்டி கண்டுபிடிக்கலாம்

5.(நீங்க ரொம்ப மோசமா யோசிச்சீங்களே அத கூட செய்யலாம், ஆனா நான் நல்ல பையன்)

இன்னும் புரியலையா ? அப்ப போடு வேற ஒரு பதிவை (நண்பேன்டாவுல ஆரம்பிச்சு evalutionla போய் முடிஞ்சிருச்சு , நான் இப்பிடி தான் எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ கொண்டு போய்டுவேன் , இருந்தாலும் பொறுத்துகிட்டு படிங்க).



போதும் இத்தோட நிறுத்திக்க…

அடுத்த பதிவில் வேறு ஒரு நண்பேன்டா வோடு சந்திப்போம் 



evolution in நண்பேன்டா?

true natpu 

இவர் மேலும் கூறுகிறார் ...

12 கலந்துரையாடல்கள்


நாய் ஏன் கால தூக்கி சுவத்துல வச்சு ஒன்னுக்கு போவுது ?
இதுக்கு பின்னால  ஒரு சோக கதை இருக்கு


இடம் : உலகத்தில் எதோ ஒரு இடம் (most probably மூத்திர சந்து )
காலம் : ஐஸ் ஏஜ் (10000 bc )
சீசன்: மழைகாலம்  
எங்கும் பசுமை, நிலமென்னும் நங்கை பச்சை பட்டாடை உடுத்தி அவளது அழகிய அங்கங்களை மறைத்து இருந்தாள், அதை கண்டு வெட்கமடைந்த ஆதவன் கீழ்வானத்தை சிவக்க செய்து மேற்கில் மறைந்து கொண்டு இருந்தான் ( ஏய் ஸூப்பருப்பா , நீ இப்புடி எல்லாம் பேசி கேட்டதே இல்லப்பா ). ஆதவன் அனைக்க நினைத்த நிலமங்கையின் தேகத்தை வருணன் மழையால் அனைத்து ( நனைத்து) கொண்டு இருந்தான் . அந்த மயக்கும் மாலை பொழுதில் romance செய்து கொண்டிருந்தன இரண்டு Siberian husky நாய் இனத்தை சேர்ந்த ரோமியோவும் ஜூலியட்டும்  .

அப்போது,

ரோமியோ : ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு , தோ வந்துர்ரேன்

ஜூலியட் : அத்தான், என்னை விட உங்களுக்கு அப்புடி என்ன அவசரம் ?

ரோமியோ : அடியே ஆத்திரத்தை அடக்கலாம் , ஆனால் ...மூஊஊ.....

ஜூலியட் : போய் தொலைங்க .


ரோமியோ நாலு கால் பாய்ச்சலில் அரை நொடியில் மூத்திர சந்தை அடைந்தான் . மடை திறந்த வெள்ளம் போல் ஏற்கனவே நனைத்திருந்த நிலத்தை நனைத்தான் .ஏற்கனவே மழையில் நனைந்திருந்த குட்டிச்சுவர் அப்படியே ரோமியோ மீது சரிந்தது, ரோமியோ ,கடைசி சொட்டு மூதிரத்தோடு உயிரையும் சேர்த்து விட்டது . இதை கண்ணுட்ற ஜூலியட் , கற்புக்கரசி கண்ணகி போல தனது நாய் association க்கு சென்று முறையிட்டது . அப்போது நாய் தலைவர் சரத்குமார் தனது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை சொன்னது ," எலேய் , இப்ப சொல்லுதேன் தீர்ப்ப , எல்லா நாய்ங்களும் நல்லா கேட்டுக்குங்க , இனி இந்த வட்டாரத்துல எந்த நாய் மூத்திரம் போனாலும் கால தூக்கி சொவத்துல முட்டு குடுத்து கிட்டு தான் போகோணும் , இத மதிச்சு மூத்தரம் போகாதவனுன்களோட யாரும் எலும்பு துண்டு share பண்ண கூடாது , ஒட்டு உறவு முதகொண்டு உடலுறவு வரை எதுவுமே வச்சுக்க கூடாது , இது தாண்டா இந்த 'நாயா'மயோட தீர்ப்பு"ன்னு சொல்லுச்சு . அன்னையில இருந்து நாய் இப்படி தான் ஒன்னுக்கு போவுது .

 இது காலம் காலமாக நாய்கள் மத்தியில் குரைக்கப்பட்டுவரும் ஒரு myth.  But the truth is different …


வயதுக்கு வந்த ஆண் நாய்களுக்கு மட்டுமே இந்த பழக்கம் , இதற்கு பல விதமான காரணங்கள் உள்ளன ( எல்லாம் hypothesis தான் )

1 . நாயின் மூத்திர பையின் முடிவில் prostate என்று ஒரு சுரப்பி உள்ளது ,அது மூத்திரம் வரும் பாதையை press செய்வதால் நாய் காலை தூக்கி வழி ஏற்படுத்திக்கொண்டு மூத்திரம் போகிறது .( கீழ உள்ள படத்தை பாருங்கள் , ப்ளூ கலர் கொடு போட்ட பாதை urine வரும் பாதை )

 


2 . Bulbus என்று ஒரு பகுதி நாய் குஞ்சில் உள்ளது [இது தான் நாய் கலவியின் போது lock ஆவதற்கு காரணம், ஏன் லாக் ஆவுதுன்னா , நாய் விந்து நம்மலோடத போல திக்கா இருக்காது , அதுவும் பன்னி , குதிரை போல கருப்பையிலே விந்தை விடாமல் , யோனியில் விடும் , அதனால் அதனுடைய நீர்த்த விந்து வழிந்து விடாமல் இருக்க இந்த லாக் ஏற்பாடு , அப்போது ஆணின் குஞ்சும் சரி ,பெண்ணின் யோனியும் சரி இரத்ததினால் நிரம்பி பெருத்து புடைத்து இருக்கும் , அதனால் கல் கொண்டு அடிக்காதீர் , கிழிந்து விட வாய்ப்பு அதிகம் ( சின்ன வயசுல நான் அடிச்சு இருக்கேன் , நீங்களும் தான் என்று எனக்கு தெரியும் ), இதுவும் நாயின் மூத்திரம் வரும் பாதையை press செய்வதால் நாய் காலை தூக்கி வழி ஏற்படுத்திக்கொண்டு மூத்திரம் போகிறது


3. இது ஒரு முக்கியமான காரணம்... விஜய் படத்துல எல்லாம் பாததுருபீங்க ,சென்னைல 4 ரவுடிங்க இருப்பாங்க , உனக்கு வட சென்னை , எனக்கு தென் சென்னை , பான்பராக்கு ரவிக்கு மேற்கு ன்னு ஏரியா பிரிச்சு வச்சுருபானுங்க. இது போல தான் விலங்குகளிலும் , இது தனது எல்லை என அடையாளப்படுத்த அது உபயோஹிப்பது ...மூத்திரம் . (ஒரு முறை சுந்தர வனக்காடுகளின் அருகில் இருக்கும் மக்களை ஒரு கொடிய புலி தொந்தரவு குடுத்து வந்தது , என்ன பண்ணியும் வேலைக்காவல, அப்போ என்னை மாதிரி ஒரு அறிவாளி veterinarian ( இந்த கோணி தலையன் லோலாயி தாங்க முடியலடா) ஜூ ல இருந்து ஒரு புலியோட மூத்திரத்த புடிச்சு ஊருக்கு வெளிய தெளிச்சு விட்டார் , வில்லன் புலி அந்த ஸ்மெல்ல மோப்பம் பிடிச்சு , இது வேற புலியோட ஏரியா ன்னு நினச்சு ஊருக்குள வராம ஓடிடுச்சு ), அதுனால தான் நாய் தனது எல்லையை குறிப்பிட சுவர் , மரம் போன்ற vertical ஆன இடங்களில் காலை தூக்கி ஒன்னுக்கு அடிக்கிறது .

நாய் மட்டுமல்ல , பல விலங்குகளில் இந்த territory marking பழக்கம் உண்டு

 
 

ஒரு ஆண் நாய், பெண் நாய் போல உட்கார்ந்து மூத்திரம் போகிறது என்றால் , அதற்கு மூதிரப்பையில் , அல்லது பாதையில் பிரச்சனை , உடனே டாக்டரை பார்ப்பது நலம்

.

அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த கோழி மேட்டர் ,

சேவலுக்கு குஞ்சு கிடையாது ,இருந்தும் எப்புடி ? ஒரு பேச்சுக்கு உங்களுக்கு குஞ்சே கிடையாது என்று வச்சுக்குவோம்,ஒரே ஒரு ஓட்டை தான் உண்டு , அதன் மூலம் கலவி கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள் , தவிச்சு போயிட மாட்டீங்களா ? ஆனால் சேவல் சில short கட் வச்சுருக்கு,

1 ) அதன் காலில் spur என்று ஒரு ஷார்ப்பான கத்தி போன்ற அமைப்பு உண்டு ,

அதன் மூலம் இணையை கெட்டியாக பிடித்து ஒரு நல்ல பொஷிசனில் வைத்துக்கொள்ளும் .




2 ) சேவலின் பின்சிரகுகள் மேல் நோக்கி காணப்படும் , அதனால் கலவியில் எந்த இடயூரும் இல்லாமல் இருக்கும்

3 )சேவலின் விந்து திக்காகவும் நீர் கம்மியாகவும் இருக்கும் , அதனால் சிந்தாமல் , சேதாரம் இன்றி cloacal kiss மூலம் inject செய்து விடும்.

அது எல்லாம் இருக்கட்டும் டாக்டர் , அது ஏன் தலையை கொத்துது :




ஒரு சுட்டி பையன் ஓடிக்கொண்டே இருக்கான் , ஆனா அவனுக்கு ஊசி போடணும் , அப்ப என்ன செய்வீர்கள் ?மண்டைல நறுக்குன்னு ஒரு கொட்டு கொட்டி படக்சுல ஊசிய போட்டர வேண்டியது தானே ன்னு தானே சொல்றீங்க ?அத தான் கோழியும் செய்யுது , கோழி ஆட்டிகிட்டு இருந்தா குஞ்சு இல்லாத சேவல் எப்புடி கரெக்டா விந்தை செலுத்தும் ? சோ கோழியினை கொத்தி கலவி கொள்கிறது.


இந்த மண்டைய கொத்துற பழக்கம் நிறைய விலங்குகள்ல இருக்கு .

.  

உங்க சந்தேகம் தீந்துடுச்சு ,ஆனா எனக்கு ஒரு சந்தேகம் .

ஆமா cock க்கு தான் cock   இல்லையே அப்புறம் ஏன் cock  cock ன்னு சொல்றாங்க ?


டிஸ்கி : போன பதிவில்" நம்ம ஊருல பசங்க தான் பொண்ணுங்கள தேடி போய் வழிக்கு கொண்டு வருவாங்க ஆனால் .... தொடரும் ..." ன்னு சொல்லி முடிச்சு இருந்தேன் , அது என்ன மிருகம்ன்னு யாராவது கரெக்டா சொன்னா , அவங்களுக்கு சாம் ஆண்டர்சன் நடித்து ( சாரி வாழ்ந்து ) இருந்த யாருக்கு யாரோ படத்தின் திருட்டு vcd அனுப்பி வைக்க படும் .டிஸ்கி topic மற்றும் ஏராளமான மேட்டரோடு சந்திக்கிறேன்

என்னை விட்டுடுங்க , இனிமே உங்க ஒன்னுக்கு சீக்ரெட்ட வெளிய சொல்ல மாட்டேன்  .
இவர் மேலும் கூறுகிறார் ...

9 கலந்துரையாடல்கள்