Prequeal
கொலம்பஸ்ஸும் அமெரிக்கோ வெஸ்புகியும் அமெரிக்க நிலப்பரப்புகளை கண்டறிந்த பின் கடற்வழி பயணங்களும் புதிய நிலப்பகுதிகளை கண்டறிவதும் அதிகமானது. மேலும் பல நாடுகள் தங்களது குடியேற்றங்களை(காலனிகள்) ஆங்காங்கே அமைக்கத் தொடங்கின. பிரிட்டிஷ் அரசாங்கமும் அப்படி காலனிகளை உருவாக்க ஆரம்பித்திருந்த சமயம் அது.

சர் வால்டர் ரெலேய்
ராணி ஒன்றாம் எலிசபெத் 
   
                 
அப்படி காலனி அமைக்க இடம் தேடி சர் வால்டர் ரெலேய் (Sir Walter Raleigh) என்பவரால் அனுப்பப்பட்ட கேப்டன்களான பிலிப் அமடஸ் (Philip Amadas) மற்றும் ஆர்தர் பார்லோவ் (Arthur Barlowe) ஆகியோர்  1584ஆம் ஆண்டு ரோனோக் தீவை கண்டறிந்தனர். அந்த தீவின் அழகு அவர்களை கட்டிப் போட்டது. அந்த தீவின் மண்ணும் மலைகளும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அவர்களுக்குத் தோன்றியது. மேலும் அங்கிருந்த பழங்குடியினரும் அவர்களுடன் அன்பாக பழகினார்கள், உபசரித்தார். இது காலனி அமைக்க ஏற்ற இடம் என முடிவு செய்த அவர்கள் இரு செவ்விந்திய பழங்குடியினரை அழைத்துக் கொண்டு பிரிட்டன் திரும்பினர்.

EPISODE 1:
புதிய நிலத்தை கண்டறிந்ததற்காக ராணி ஒன்றாம் எலிசபெத் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இதற்கு காரணமான சர் வால்டர் ரெலேய் (Sir Walter Raleigh)-ஐ பாராட்டினார். ரெலேயின் வற்புறுத்தலுக்கிணங்க அந்த புதிய நிலப்பரப்பில் காலனி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த நிலப்பரப்பிற்கு ராணியின் நினைவாக விர்ஜினியா (Virgin Queen – Elizabeth I) என பெயர் வைக்கப்பட்டது. 1585ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பக்கம் இருந்த ரோனோக் (Roanoke) தீவுக்கு காலனி அமைக்க 100 பேர் கொண்டஒரு குழு அனுப்பட்டது.

   
                                   சர் ரிச்சர்ட் கிரீன்வில்லி                       சர் ரால்ஃப் லேன்                                   

குழு தீவில் இறங்கியதும் மெல்ல மெல்ல காலனியை அமைக்கத் தொடங்கியது. கடற்கரையோரமாக ஒரு துறைமுகத்தை (Fort Raleigh) கட்டினார்கள். ரெலெய் அவர்களிடம் சொன்னது: பழங்குடியினரை மரியாதையாக நடத்த வேண்டும். அவர்களை அடிமைப்படுத்தக்கூடாது, அவர்களின் சொத்துக்களை நாசம் செய்யவோ அபகரிக்கவோ கூடாது. ஆனால் அந்த குழுவின் அட்மிரல் ரிச்சர்ட் கிரீன்வில்லியும் (Richard Grenville),  கவர்னர் ரால்ஃப் லேனும் ( Ralph Lane) அதை காற்றில் பறக்க விட்டனர்.

செவ்விந்தியர்களின் குடியிருப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து தேவைப்பட்டதை எடுத்துக் கொள்ளுதல், அவர்களை அடித்தல் என முறையின்றி நடந்துகொண்டனர். ஒரு முறை தன் தண்ணீர் குடிக்கும் வெள்ளிக் கோப்பை காணாமல் போனதற்கு செவ்விந்தியர்களின் குடியிருப்பை எரிப்பேன், அவர்கள் தலைவனை கொல்லுவேன் என கிரீன்வில்லி கத்தி கோப்பப்பட்டார் என்றால் அவர்களின் குணத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
துறைமுகம்

அவர்கள் கொண்டு வந்த உணவு குறைவுதான். இந்நிலையில் உணவிற்காக அவர்கள் செவ்விந்தியர்களைத்தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது. அந்நிலையிலும் அவர்களின் துஷ்பிரேயோக எண்ணம் மறையவில்லை. உணவு இருப்பு குறைந்ததால் அதன் பொருட்டு கிரீன்வில்லி இங்கிலாந்து சென்றார். அதன் முழுப் பொறுப்பும் ரால்ஃப் லேனிடம்தான் வந்தது. லேன் கிரீன்வில்லிக்கு சற்றும் சளைத்தவரல்ல. கிரீன்வில்லி வாயால் சொன்னார், ஆனால் லேன் அதை செய்தே முடித்தார். ஆம் கிரீன்வில்லி இங்கிலாந்திலிருந்து வராமல் தாமதமாகவே, உணவிற்காக செவ்விந்தியர்களின் குடியிருப்புகளில் புகுந்து அவர்களை அடித்துப் போட்டு கொள்ளையடித்தார் லேன். அவர்களின் குடியிருப்புகளை எரித்தார். செவ்விந்தியர்களின் தலைவனை கொன்றார். ஆனால் கலவரம் அதிகமாகவே உயிருக்கு பயந்து மீதமுள்ள வீரர்களுடன் துறைமுகத்திற்கு வந்து ஒளிந்து கொண்டார்.

     
பழங்குடியினரும் அவர்கள் கிராமங்களும்

பயந்து ஒளிந்து கொண்டிருந்த சில நாட்களில் சர் ஃபிரான்சிஸ் ட்ரேக் என்பவர் கப்பலுடன் அத்தீவு பக்கம் வர இவர்கள் அங்கே தஞ்சம் புகுந்து இங்கிலாந்து திரும்பினர். கிரீன்வில்லி தன் கப்பலோடு அந்த தீவுக்கு வந்து சேர்ந்தபோது யாருமில்லாததைக் கண்டு துறைமுகத்தை பாதுகாக்க மட்டும் 15 வீரர்களை அங்கே விட்டு விட்டு மீண்டும் இங்கிலாந்து கிளம்பினார். சில முட்டாள்தனமான செயல்களால் காலனி அமைக்கும் அந்த முதல் முயற்சி தோல்வியடைந்தது.

EPISODE 2:
முதல் காலனி முயற்சி தோல்வியடைந்திருந்தாலும் 1587ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக காலனி அமைக்கலாம் என ரோனோக் தீவுக்கு 121 புதிய நபர்களை அனுப்பி வைத்தார் ரெலேய். ஆனால் அங்கே தங்களக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பழிவாங்க காத்திருந்தார்கள் க்ரோட்டான் செவ்விந்தியர்கள்.

புதிய காலனிக்கு தலைமை ஏற்று சென்றவர் கவர்னர் ஜான் ஒயிட். அவரோ அல்லது அவரின் குழுவினரோ செவ்விந்தியர்களுடன் வன்முறையில் ஈடுபடும் எவ்வித எண்ணமும் இல்லாமல்தான் அந்த தீவில் இறங்கினார்கள்.

தீவில் இறங்கியதும் கிரீன்வில்லி விட்டுச் சென்ற 15 வீரர்களை தேடினார்கள். முடிவில் அவர்களை செவ்விந்தியர்கள் கொன்றிருந்தது தெரியவந்தது.  இருந்தபோதும் அவர்களுக்கு வேறு வழியில்லை. அங்கே பழுதடைந்திருந்த துறைமுகத்தை சீர் செய்து தங்கள் வாழ்க்கையை துவங்கினார்கள் அவர்கள்.
 
ஜான் ஒயிட் அந்த தீவிற்கு தன் மகள், மருமகனுடன்தான் வந்திருந்தார். மகள் அப்போது கர்ப்பமாய் இருந்தாள். தீவிற்கு வந்த சில நாட்களில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆகஸ்டு 18, 1587 புதிய மண்ணில் பிறந்த முதல் பிரிட்டிஷ் குழந்தைக்கு விர்ஜினியா என பெயரிடப்பட்டது. ஆனால் சந்தோசம் நீடிக்கவில்லை…

அத்தீவில் பலவித பழங்குடியினர் இருந்தார்கள். அதில் க்ரோட்டன் செவ்விந்தியர்களைத்தான் முந்தைய காலனியர் கொடுமை செய்திருந்தனர். அவர்களின் பழிவாங்கல் இந்த குழுவிடம் தொடர்ந்தது. அச்சமயம் பிரிட்டிஷ்-ஸ்பானிஷ் போர் நடந்து கொண்டிருந்ததால் இங்கிலாதிலிருந்து உணவு வரத்து கிடைக்கவில்லை. இதனால் இந்த காலனியர் அமைதியான முறையில் தீவுகளில் மீன்பிடித்து உணவுத் தேவையை தீர்த்துக் கொண்டனர். ஆனால் அப்படி போகும்போது பழங்குடியினருடன் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. ஒருமுறை தனியாக மீன்பிடித்துக் கொண்டிருந்த காலனி நபர் ஜார்ஜ் ஹோவ் என்பர் அந்த பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.

ஜான் ஒயிட்

நாளுக்கு நாள் உயிர்பயம் அதிகமானதால் உதவி கேட்பதற்காக கவர்னர் ஜான் ஒயிட் தன் மகள், மருமகள், பேத்தி உட்பட 90 ஆண்கள், 17 பெண்கள் மற்றும் 11 குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு உதவி கேட்பதற்காக இங்கிலாந்து திரும்பினார். அவர்கள் யாரையும் இனி பார்க்க போவதில்லை என அவருக்குத் தெரியவில்லை…

EPILOGUE:
ஒயிட் இங்கிலாந்து சென்ற சமயம் போர் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. இதனால் மூன்று ஆண்டுகளுக்கு உணவுத் தேவையை வழங்கவில்லை இங்கிலாந்து அரசு. கடுமையாக போராடி அனுமதி வாங்கி 1590ல் ரோனோக் தீவுக்கு கிளம்பினார் ஜான் ஒயிட். சரியாக தன் பேத்தியின் 3வது பிறந்தநாளன்று ரோனோக் தீவுக்கு வந்திறங்கினார் ஒயிட்.



அங்கே தீவு பாலைவனமாக காட்சியளித்தது. அங்கே ஒருவர் கூட இல்லை. அங்கிருந்த வீடுகள் எல்லாம் மாயமாய் மறைந்திருந்தன. போராட்டம் நடந்ததிற்கான ஒரு சிறு அறிகுறி கூட இல்லை. யாருடைய உடல்களும் இல்லை.. எல்லோரும் எங்கே? ஒரு பலகையில் "Croatoan" என்றும் ஒரு மரத்தில் "Cro" என்றும் செதுக்கப்பட்டிருந்தது. வேறெந்த அடையாளமும் இல்லை. ஒயிட் செல்வதற்கு முன் தன் குழுவினரிடம் அவர்களுக்கு ஆபத்து நேர்ந்து வேறெங்காவது சென்றால் அந்த இடத்தை மரத்தில் செதுக்கி வைக்க சொல்லியிருந்தார். அதனால் அவர்கள் அருகிலுள்ள க்ரோட்டான் தீவுக்குச் சென்றிருக்கலாம் என தேட முயன்றார். ஆனால் கடும் பனிப்புயல் காரணமாக தேடிச் செல்ல முடியவில்லை. மறுநாள் இங்கிலாந்து திரும்பினார்.

பின்னாளில் பல காலனிகள் அங்கே வந்து இன்று அது மக்கள் வாழும் பகுதியாக மாறியுள்ளது. ஆனாலும் இந்த கேள்விக்கு இன்னமும் பதிலில்லை…அந்த 90 சொச்ச பேர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் இறந்ததற்கான தடயமே இல்லையே. அதுமட்டுமில்லாமல் வீடுகள் எல்லாம் அப்படியே மறைந்திருந்தன அவை பிரிக்கப்பட்டதற்கோ, எரிக்கப்பட்டதற்கோ எந்த அடையாளமும் இல்லை. அவர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், அவர்கள் பழங்குடியினருடன் கலந்திருக்கலாம் எனவும், நோய், புயல்காற்று போன்றவற்றால் இறந்திருக்கலாம் எனவும் பல யூகங்களை பலர் முன்வைத்தனர் இத்தனைக் காலங்களில்… ஆனால் எதற்கும் ஆதாரங்கள் இல்லை.

 
இன்றைய ரோனோக் தீவு

இந்த சம்பவத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது ஒயிட்தான். தன் குடும்பம் உட்பட தன் குழுவினர் காணாமல் போனது அவரை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியது. அந்த பாதிப்பிலிருந்து தன் வாழ்நாள் முடியும் வரை அவர் மீளவே இல்லை. வாழ்நாள் முழுதும் ரோனோக் நினைவாகவே இருந்தார். ரோனோக் பற்றி அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் உள்ளன. இங்கே உள்ள ஓவியங்களில் சில அவர் வரைந்ததுதான். அவர்கள் நினைவாகவே அவர் வாழ்ந்து மடிந்தார். வரலாறு இன்னமும் அவர்களுக்கு என்ன ஆனது என ஆராய்ந்து கொண்டிருக்கிறது……


-Pluto

இவர் மேலும் கூறுகிறார் ...

4 கலந்துரையாடல்கள்



-                                   கேள்வி பதில் (பகுதி 2)


                                                                    

"யாரு பராக்கா..சொல்லுங்க ரொம்ப நாளா Phone பண்ணவே இல்ல..மிச்சல் சௌக்கியமா...ஒயிட் ஹவுஸ் மழை பெஞ்சா ஒழுகுதுனு சொன்னீங்களே சரி பண்ணிடீங்களா??"

" "


"ம்..நா நல்லா இருக்கேன்...வேறென்ன விசேசம்.."


" "

"என்னது..நம்ம ப்ளாக்ல வர்ற கேள்வி பதில ஒங்க ஊர் பாடதிட்டத்துல சேக்கனுமா..அங்கெல்லாம் சமச்சீர் கல்வி கெடையாதா..."


"  "

"ஓ அப்டியா..இருங்க எதுக்கும் நா நம்ம மன்மோகன்ட்ட கேட்டு சொல்றேன்..."


" "

"இல்ல இல்ல ..அவர் பார்லிமென்ட்ல தான் பேச மாட்டாரு ..என்கூடலாம் நல்லா பேசுவாரு..தங்கமான ஆளுங்க..."

***********************************************************************************

மேற்கொண்டு எதுவும் பேசத்தேவையில்லை. நேரா கேள்வி பதிலுக்கு போயிருவோம்.

1) அது ஏன் கைது செய்பவர்கள் எல்லோரையும் திகார் ஜெயிலில் அடைக்கிறார்கள்???     (பாண்டி,பாளையங்கோட்டை) 
  ம்..அங்க புதுசா நூறு போதி மரம் நட்டிருக்காங்கலாம். எல்லா பய புள்ளைகளும் ரிலீஸ் ஆகுரப்போ புத்தராகி வந்திருவாய்ங்களாம். அதான்.


2) கடந்த ஆட்சி காலத்தில் செத்தவர்களின் சாவு செல்லாது என அம்மா அறிவிக்கப்போகிறாராமே???   (சித்தன், உன்னயேநீஎண்ணிபாருபட்டி)
  இதுக்கே இப்டி சொல்றீங்க கண்ணகி சிலைய Hongkongக்கு அனுப்பப் போறதாக் கூட ஒரு நியூஸ் இருக்கு..என்ன செய்றது...


3) உங்கள் ப்ளாக்ஐ தொடர்ச்சியாய் படித்துவந்தால் எயிட்ஸினால் சாவில்லை என விளம்பரம் கொடுத்துள்ளீர்களே இது எந்த வகையில் நியாயம்????  (புள்ளிராஜா ,கில்மாபுரம்)
 யோவ் நம்ம ப்ளாக்க தொடர்ச்சியா படிச்சா ரத்தம் கக்கி அவனே செத்திருவான். அப்புறம் எப்டி எயிட்ஸினால சாவான். கரக்ட் தானே ...


4) என் மகன் எவ்வளவு திட்டினாலும் தலையாட்டிக்கிட்டு ஒரு வார்த்தை கூட பேசாம அப்டியே உட்காந்திருக்கான்..என்ன செய்வது ???  (நல்லதங்காள்,நாராயணபுரம்)
ரொம்ப சந்தோசமான விஷயம்மா இது. உங்க புள்ளைக்கு பிரதமர் ஆகுற எல்லாத்தகுதியும் வந்திருச்சு.ஜமாய்ங்க..


5) அந்த மாதிரி சர்வே ஒன்னு சொல்லுங்களேன்...ப்ளீஸ் ??  (காஞ்சவன்,வேலூர்.)
டேய் ஒன்னத்தாண்டா ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்...எங்கள பாத்தா ஒனக்கு எப்டிடா தெரியுது...இல்ல இதுக்கு முன்னாடி நாங்க அந்த வேல பாத்திட்டு இருந்தோமா...இவரு பெரிய கலெக்டர்... இவருக்கு சர்வே எடுத்து குடுப்பாங்களாம்...


6) அமேசான் காட்டில் வாழும் "அரபகிமோ"ங்கிற இனப்பறவை தன் வாழ் நாள் முழுக்க கக்காவே போகாதாமே??   (அறிவழகன், அணைப்பட்டி.)
இந்த நாத்தம் பிடிச்ச கேள்விய கேட்ட பாரு ஒனக்கும் ஒரு வாரத்துக்கு போகாதுடா... தைரியமான ஆளா இருந்தா அடுத்த தடவ முழு அட்ரஸ் எழுதி இந்தமாதிரி கேள்வி கேளுடா...


7) ச்சே இப்படி விம்பிள்டன் இறுதி போட்டில ரபால் நடால் தோத்துட்டாரே??    (சார்லஸ்,பக்கிங்காம்) 
ஏன் செய்ச்சிருந்தா ஒம்பொண்ண கட்டிக்குடித்திருப்பியா?? அவனே வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்னு போயிட்டான்.ஒனக்கென்ன ஒப்பாரி??


8) ஒரு நாள் டிஸ்கவரி சேனல்ல வர நிகழ்ச்சில கரடிகள் பேசும்னு சொன்னாங்க...இது எந்த அளவு உண்மை??  (வீரப்பன்,சத்தியமங்களம் )
நூறு சதவீதம் உண்மை. டான்செல்லாம் கூட ஆடும். வீராசாமி படம் பாக்கலையா...


9) நம் நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகிறதே இதை கண்டு உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா???( மனோகரன்,பராசக்திபுரம்) 
அத விடு. ஒரு நூறு ரூபா தள்ளுனேன்னா இந்த கேள்விய முதல் கேள்வியா போட்டிரலாம்..என்ன சொல்ற ...


10) "தமிழர்களே நான் கடலில் போட்டாலும் கட்டுமரமா மிதப்பேன்"ங்கிற  கலைஞர் டிவி விளம்பரம் எப்படி?    (வீராசாமி, ஆற்காடு)
   அதுல போனா மட்டும் நம்ம தமிழக மீனவன சுடாம இருப்பாய்ங்களா....


                                                            
11) நடந்து முடிந்த தேர்தலில் உங்களுக்கு பிடிபட்ட உண்மை என்ன??      (அரிச்சந்திரன், அரண்மனைப்புதூர் )
  வடிவேலுவின் நகைச்சுவையை மக்கள் வெகுவாக ரசிக்கிறார்கள்.


12) ரசிகர் மன்றங்களை கலைத்த அஜித் பற்றி என்ன சொல்றீங்க ??     (தீனா, அத்திப்பட்டி )
 உங்காத்தாவ முதல்ல பாரு 
  மங்காத்தவ பிறகு பாத்துக்களாம்ங்கிறாரு...நல்ல விஷயம் தானே 


இவண் 
சிவன்
ivansivan@gmail.com




இவர் மேலும் கூறுகிறார் ...

3 கலந்துரையாடல்கள்


Iconoclast.

பொதுவாக, தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டுவரும் நம்பிக்கைகளையும், தனிநபர் வழிபாட்டையும் உடைக்கும் ஒரு நபரே Iconoclast. அதாவது, கலகக்காரர். யார் வேண்டுமானாலும் Iconoclast ஆகி விட முடியாது. இந்தியாவில், தனது சமுதாயம் தன்மீது திணிக்கும் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் சிந்தனைகளையும் கேள்விகேட்டு உடைத்து, அறிவை உபயோகித்து எது நல்லது எது கேட்டது என்று தரம்பிரித்து அறியும் திறன் உள்ள ஒருவனே Iconoclast ஆக முடியும். எத்தனை மாட்டுத்தனமான சிந்தனைகள் நம்மீது திணிக்கப்படுகின்றன இங்கே ! கலாச்சார ரீதியாக எந்த வகையிலும் ஒரு தனிமனிதன் நல்லறிவைப் பெற்றுவிடக்கூடாது என்றே இந்தியாவில் - குறிப்பாகத் தமிழகத்தில் - மீடியாவும் அரசும் மதமும் கட்சிகளும் இயங்குகின்றன. இவற்றைத் தாண்டி ஒரு மனிதன் சிந்தனை விடுதலை அடைவது மிகக்கடினம் என்றே தோன்றுகிறது.

தமிழகத்தில் சினிமா நடிகர்களே கடவுள்கள். ஒன்றுக்கும் உதவாத ஊழல் அரசியல்வாதிகளே தலைவர்கள். குப்பையான pulp நாவல்களே இலக்கியங்கள். தொலைக்காட்சியில் வரும் படு அசிங்கமான நிகழ்ச்சிகளே பொழுதுபோக்கு. ஏன் இப்படி இருக்கிறது? உலகெங்கும் உள்ள நல்ல புத்தகங்கள், சிறந்த திரைப்படங்கள், தலைசிறந்த நடிகர்கள் ஆகிய எதுவும் இங்கே உள்ளே நுழைய முடியாத சூழல். தமிழகத்தின் பெரும் பொறுப்புகளில் இருக்கும் மனிதர்களே படுமட்டமான ரசனையை உடையவர்களாகத் திகழ்கின்றனர். அப்படி இருக்கையில், இவர்கள் எங்கே நல்ல விஷயங்களைப் பரிந்துரைக்கப்போகிறார்கள்?

ஆகவேதான் நம்மால் வழிவழியாகப் பின்பற்றப்படும் நம்பிக்கைகளையும் ரசனை முறைகளையும் நாம் கேள்வி கேட்க வேண்டும். நமது மதம் இப்படிச் செய்யச் சொல்கிறதா? கேள்விகளைக் கேட்போம். ஏன் இப்படி நடக்கிறது என்று வினவுவோம். நமது மதம், குறிப்பிட்ட ஜாதியினரை அசிங்கம் என்று சொல்கிறதா? அந்த மத விதிகளை உடைப்போம். கேள்வி கேட்போம். பொதுவில், மனித ரசனை இங்கே மலையளவு மாறவேண்டியிருக்கிறது. இன்னமும் ராஜேஷ் குமார் போன்றவர்களையே சிறந்த எழுத்தாளர் என்று சொல்லும் கும்பல்தான் இங்கே அதிகம். பாலச்சந்தரே உலக இயக்குநர். கமல்ஹாசன் உலக நாயகன். இங்கே அடிமட்ட ரசனையைப் பரப்பும் எவராக இருந்தாலும், இப்படி 'உலக' என்று ஆரம்பிக்கும் ஒரு பட்டம் அவர்களுக்குத் தமிழகத்தின் ஆட்டுமந்தைகளின் சார்பில் வழங்கப்படுகிறது. பட்டம் கிடைத்ததும், அவர்கள் கடவுளர்களாக மாறிப்போனதொரு மனநிலையில் ஊறித்திளைத்து, தங்களது வழிபாட்டு முறைகளை மக்களுக்கும் எடுத்து இயம்புகின்றனர். எவ்வளவு அசிங்கம் இது !

அரசியலை எடுத்துக்கொண்டால், மக்களால் வழிபடப்பெறும் அரசியல்வாதிகளின் ரசனை எந்த நிலையில் இருக்கிறது? மானாட மயிலாட நிகழ்ச்சியைப் பரிந்துரைத்து, மக்களின் சுயமைதுன முயற்சிக்குப் பெரிதும் உதவிபுரிவதே இந்த அரசியல்வாதிகளின் முழுநேர வேலையாக இருக்கிறது. நடிகர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்?  உடன் வேலை செய்யும் நடிகர்களை 'சார்... சார்' என்று அழைப்பது; அவர்களின் கால்களை நக்குவது; உலகத்தில் உள்ள அயோக்கியத்தனம் முழுவதையும் செய்வது; போர் அடித்தால் கட்சி ஆரம்பித்து விடுவது. என்ன நடக்கிறது இங்கே? எந்த நடிகராவது, இயக்குநராவது, தயாரிப்பாளராவது, நடிகையாவது இதுவரை தங்களின் ரசிகர்களை நல்ல ரசனையின்பால் திருப்பியிருக்கிறார்களா? கேடுகெட்ட  மொக்கைத் திரைப்படங்களே இவர்களது பார்வையில் உலகப்படங்களாக  இருக்கின்றன.

நல்ல புத்தகங்கள் எத்தனை இருக்கின்றன தமிழகத்தில். எந்த அரசியல்வாதியாவது இவற்றைப் பற்றிப் பேசி மக்களின் ரசனை முன்னேறுவதற்கு முயற்சித்திருக்கிறார்களா? இல்லையே. கருணாநிதியின் புத்தகங்களே இலக்கியம்.

இப்படித் தமிழகத்தின் கலைச்சூழல் அசிங்கப்பட்டுப் போயிருக்கும் நிலையில், நல்லவற்றைத் தேர்ந்தெடுப்பது, மக்களாகிய நமது கையில்மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் அனைவருமே Iconoclast  களாக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தால் மட்டுமே மீடியா மற்றும் சமுதாயம் நம்மீது விதிக்கும் விதிகளை உடைக்க முடியும். நல்ல குடிமகனாகவும் வாழ முடியும். எதையும் எதிர்த்துக் கேள்வி கேளுங்கள் நண்பர்களே. சமூக நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் உடையுங்கள். 'தமிழனுக்கு வழிபடுவதற்கு இரண்டு செருப்புகள் எப்போதும் தேவை. செருப்பை அணிபவர்கள் மட்டும் மாறிக்கொண்டே இருப்பார்கள்' என்று ஒரு சொலவடை உண்டு. அதை உடைப்போம். தமிழகத்தில்  வழிபடப்பெறும் ஸ்தானத்தில் இருக்கும் 'கடவுள்களை' உடைப்போம். கடவுளை உடைப்போம் என்றால் , உடனே சிலைகளை உடைப்பது அல்ல பொருள். அப்படி மக்களால் போற்றப்பட்டு, வழிபடப்பெற்றுக்கொண்டிருக்கும்  போலிகளின் மீதான நம்பிக்கையை உடைப்போம்.


ஒரு தனிமனிதனின் ரசனை மாறினால், அவனது வாழ்வு மேம்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது சமுதாயம் தன்மீது திணிக்கும் மூடநம்பிக்கைகளை முதலில் அந்த மனிதன் தூக்கி எறிந்தாலே, அவனது ரசனை வழியை அடைத்துக்கொண்டிருக்கும் தடைகள் உடைந்துவிடும். குமாஸ்தா மனநிலை என்று ஒன்று உண்டு. மிகப்பெரும் செல்வந்தனாக ஒருவன் இருக்கலாம். ஆனால், அவனது மனதில், இன்னும் ஒரு குமாஸ்தாவின் மனநிலையை ஒத்த சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கும். அவனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லாதவாறு இந்தச் சிந்தனைகள் அவனைத் தடுக்கும். அந்தக் குமாஸ்தா மனநிலை முதலில் நம்மிடமிருந்து ஒழிய வேண்டும்.

குமாஸ்தாவாக யாரும் இருக்கலாம். அது அவரது உரிமை. ஆனால், குமாஸ்தா மனநிலையோடு இருந்துகொண்டு சகமனிதனுக்கு ஊறு விளைவிப்பது ஒரு தனிமனிதனின் உரிமை அல்ல. ரசனை மாறினால் ஒழிய, இந்த குமாஸ்தா மனநிலை நம்மை விட்டுப்போகாது.

எனது அனுபவத்தில், பலரைப் பார்த்திருக்கிறேன். ஆள் பெரிய வேலையில் இருப்பார். ஆனால், மனதில், தனது ஜாதியும் சமூகமும் தன்மீது அமுக்கிய அத்தனை சிந்தனைகளையும் வைத்துக்கொண்டு, எப்போதடா அடுத்தவன் மீது திணிக்கலாம் என்று காத்துக்கொண்டிருப்பார். அதாவது, தான் நினைக்கும்படிதான் அடுத்தவன் வாழ வேண்டும் என்று ஒரு சர்வாதிகார சிந்தனை அவர்களிடத்தில் இருக்கும். இவர்களிடம் அதிகாரம் வந்தால், இவர்களின் எண்ணத்துக்கு மாறாக நினைப்பவர்கள் காலி. நரேந்திர மோடி போல. அண்ணா ஹசாரே போல. ஹிட்லர் போல. எத்தனை பேர் இன்னமும் நம் நாட்டில் நரேந்திர மோடியை துதிபாடிக்கொண்டிருக்கிறார்கள்?


இந்தச் சூழ்நிலையில்தான் பெரியார் போல ஒரு Iconoclast  நமக்குத் தேவை. பெரியாரைப் பார்த்தால், நாட்டில் பின்பற்றப்படும் அத்தனை நம்பிக்கைகளையும் எந்நேரமும் திட்டிக்கொண்டும் கேலிசெய்துகொண்டுமே இருந்திருக்கிறார். பெண் விடுதலை பற்றியும், விதவைத் திருமணம் பற்றியும், தேசாபிமானம், பாஷாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை ஒழிப்பது பற்றியும், மதம் நம்மீது திணிக்கும் அசிங்கங்கள் பற்றியும் எத்தனை முறை அவர் பேசியிருப்பார்? அதைக் கடைபிடித்தும் வாழ்ந்தார். அவர் ஒரு உண்மையான Iconoclast  . ஒரு கலகக்காரர்.

அவரைப்போல், எதையும் கேள்விகேட்டு, அந்த பதில் நமது மனதில் முழுமையாகப் படிந்தால் மட்டுமே ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள நாம் பழக வேண்டும். ஒரே ஒரு விஷயம். இந்த உலகில் நாம் வாழும் வாழ்க்கையைப் போலவே, சகமனிதனுக்கும் வாழ உரிமை இருக்கிறது என்பது நம்மால் சரிவரப் புரிந்துகொண்டுவிடப்பட்டாலேயே, எவருக்கும் எந்தத் துன்பமும் விளைவிக்காமல் வாழ்ந்துவிடலாம்.

ஆகவே, நல்ரசனையோடு, விசாலமான மனதோடு, ஒரு Iconoclast  ஆக வாழ்ந்து, நம்மால் முடிந்தவரை சமுதாயம் திணிக்கும் அசிங்கமான சிந்தனைகளை உடைப்போம்.


                                                                                                                     
                                                                                                                                          -- வீராசாமி
இவர் மேலும் கூறுகிறார் ...

14 கலந்துரையாடல்கள்

தி FACEBOOK காரன்






"ஹே சிவா...எப்டி இருக்க..வா(ட்)ஸ்அப்...". ஒரு கீச்சு கீச்சு குரல் எனக்குப் பின்புறம் இருந்து வந்தது. மதுரையின் பெரியார் பேருந்து நிலையத்தின் ஒரு சனிக்கிழமை காலை நேரம். யாரென திரும்பி பார்த்தேன். முக்கால் டவுசர் ஒன்னு போட்டிருந்தான். மூஞ்சில் மீசை இல்லை, ஆனால் வாய்க்கு ஜட்டி போட்டது போல் தாடைக்கு அடியில் தாடி வைத்திருந்தான். அந்த மொகர கட்டையை  நான் அடிக்கடி பார்த்திருப்பது போல் இருந்தது. "டேய் நான் தான்டா ரகு" என சொல்லி அந்த கருமம் பிடித்த கூலிங்கிளாசை கழட்டினான்.

 'அட கோணயா...நீயா..' என்றேன். என்னுடைய பள்ளி நண்பன். ஒரு மூன்றெழுத்து கம்பெனியில் ஐந்து வருடமாய் வேலை பார்க்கிறான்.

'இன்னும் நீ நிக்நேம்ஸ்லாம்..மறக்கல..ஹி ஹி' என சொல்லிக்கொண்டே மொபைலை எடுத்து ஏதோ டைப் செய்து கொண்டிருந்தான்.

'என்னடா பண்ற...'

'இல்ல..உங்கூட பேசிக்கிட்டு இருக்கேன்னு Facebookல அப்டேட் பண்றேன்'

'அடங்... ஏன் மூச்சா போறதையும் அப்டேட் பண்ணேன்'

'அத one hour முன்னாடியே அப்டேட் பண்ணிட்டேன்.... அதுக்கு 18 'Likes'....'

'டேய் மூச்சா போனதுக்கு எதுக்குடா 18 Likes...'

'இதுக்கே இப்டி சொல்ற..போன வாரம் எங்க ஜிம்மி கக்கா போயிருச்சுன்னு ஒரு status மெசேஜ் போட்டேன்..அதுக்கு 27 likes...'

'அட கழிசடைகளா அந்த கண்றாவி facebookல அப்படி என்னதாண்டா இருக்குது...'





ரகு கண்ணாடியை கழட்டிவிட்டு என்னை மேலும் கீழுமாய் பார்த்தான். கொஞ்சம் பழைய காலத்து உவமையோடு சொல்லவேண்டுமென்றால் புழுவை பார்ப்பது போல பார்த்தான். ஏற்கனவே மேற்கூறிய அந்த சிறப்புவாய்ந்த கண்ணாடியை கழட்டினான். கண்கள் நம் கேப்டனின் கண்கள் போல சிவப்பாயிருந்தது. கோபமாகிவிட்டானாம். அவன் குடும்பத்தையே திட்டி இருந்தாலும் இவ்வளவு கோபித்திருப்பானா தெரியவில்லை. இருந்தாலும் அவனை வெறியேற்றுவது அவ்வளவு நல்லதில்லை என்பதால் கொஞ்சம் அடக்கி வாசித்தேன்.

'இல்ல மச்சி... அந்த Facebook வென்ற எங்களுக்கும் சொல்லி குடுத்தேனா நானும் இந்த மாதிரி சீன் போடுவேன்ல....'

'அப்டி வா...மொத இந்த மச்சி..மாப்பு..பங்குனு கூப்பிடுறத நிறுத்து....buddy...Dude...bro..folks..னு கூப்டு'

'ஆமா அதென்ன மூனாவுது.. லேடீஸ் மேட்டரா இருக்கு'

'டேய் ஸ்டுப்பிட்..அது ப்ரோ டா'

'சாரிப்பா'

'அப்புறம் பேப்பர்,பென்சில்,சட்டை,பனியன் எது வாங்குனாலும் Facebookல அப்டேட் பண்ணிரு...முடிஞ்சா ஒன்னோட மொபைல்ல போட்டோ புடிச்சு போட்டிரு...'

'எனக்கு புரிஞ்சு போச்சு..அதுக்கப்புறம் அதுக்கு 'cho sweet'னு நாலு பிகருங்க கமென்ட் போடுவாங்க. 'Nice' னு நாலு Formalityக்கு பொறந்தவனுங்க கருத்து தெரிவிப்பாய்ங்க. 

'எக்ஸாக்ட்லி...'



'ஒரு டவுட்ப்பா... 'எனக்கு எங்க ஆயாவ பிடிக்கும்..அப்பத்தாவ பிடிக்கும்...ஒனக்கும் புடிச்சிருந்தா இத ஒன்னோட Status மெசேஜா வைன்னு ஒரு கூட்டம் சொல்லிக்கிட்டு அலையுதே அத follow 


பண்ணலாமா..'

'அது ஓல்ட் ஸ்டைலுடா... அந்த செண்டிமெண்ட் மேனியா இப்போ செட் ஆகாது...பேசாம நல்ல வீடியோவா பார்த்து upload பண்ணிவிடு'

'அஞ்சரைக்குள்ள வண்டி படத்தில இருந்து ரெண்டு செம்ம சீன Upload பண்ணிவிடவா...பசங்க மத்தில ரீச் ஆகிடலாம்..'

'பொண்ணுங்க செருப்பால அடிப்பாங்க...ஏற்கனவே ஒன்ன பாத்தா ஈவ் டீசிங் கேஸ்ல பெயில்ல வந்தவன் மாதிரி தான் இருக்கு..'

'ஹிஹி...ஒட்டு மொத்த கூட்டத்தையும் எம்.ஜி.ஆர் மாதிரி கவுத்த ஏதாவுது ஐடியா சொல்லுடா..'

'அண்ணா ஹசாரே..மங்காத்தா...கிரிக்கெட்ன்னு current affairs அடிச்சு விடு...உள்ள புகுந்து 'எஸ் யுவர் ஆனர்' னு ஆளாளுக்கு கருத்து சொல்லுவானுங்க..'

'வாவ்'

'பெறகு..ஆன்சைட்னு சொல்லிக்கிட்டு வெளிநாடு போனேனா..ஏர்போர்ட்ல இருந்து இறங்குனவுடனே "ஈ" னு சிரிச்சா மாறி போட்டோ எடுத்து ஒன்னோட Profile பிக்ச்சரா போட்டுரு..'

'டன்...அப்டியே தமிழுல கவிதை..ஹைக்கூனு பரிட்சார்த்த முயற்சிகள் செய்யவா...என்ன சொல்ற ??"

'ஆமா..இவர் பெரிய கமலு..Experiment பண்றாரு...தமிழுல கவிதை எழுதுறதுங்கறது பா.ம.க தனியா எலெக்சன்ல நிக்குற மாதிரி..கரையேற வாய்ப்பே இல்ல... அப்றம் முக்கியமான விஷயம் உங்க வீட்ல என்ன முக்கியமான விசேஷம் நடந்தாலும் உங்க சொந்தக்காரனுக்கு சொல்றியோ இல்லையோ Facebookல சொல்லிரனும். எவன் போட்டோ போட்டாலும் போயி "Like" பண்ணிரனும். பொண்ணுங்க போட்டோ போட்டாங்கன்னா போடுற மொத கமெண்ட் நம்மளோடதா தான் இருக்கும். எவனுக்காவுது பொறந்த நாள் வந்ததுன்னு வை...'

'கால் பண்ணி விஷ் பண்ணனும்...'

'யு இடியட்....அப்புறம் சாதா பப்ளிக்கும் நமக்கும் என்ன வித்யாசம். அவன் உன்னோட உயிர் நண்பனாவே இருந்தாலும் அவன் Wall ல போயி Happy Birthday எழுதணும். கால் பண்ணி விஷ் பண்றதெல்லாம் ஒரு Facebookகாரன் பண்ணக்கூடாது.'

'ஓகே'

'சிரிக்கிறது கூட கெக்கே பேக்கே னு சிரிக்கப்படாது. 'lol :)' னு தான் சிரிக்கணும். OMG,BRB மாதிரி வார்த்தைகளெல்லாம் யூஸ் பண்ணியே ஆகணும். தீபாவளி,பொங்கல் னா தலைவர்கள் மாதிரி வாழ்த்து செய்தி ஒன்ன போட்டு விட்ரு. எடேலே youTube போயி நாலு வீடியோவ upload பண்ணிவிடு. நீ ஓட்டுப் போடுறியோ இல்லையோ,டேக்ஸ் கட்டுவியோ மாட்டியோ, 'அவன் சரியில்லை இவன் சரி இல்லை..அய்யகோ நாடு எங்க போகுது னு' எந்நேரமும் பொங்கிக்கிட்டே இரு. உன்ன எல்லாரும் இவரு தாறுமாறான சிந்தனைவாதினு நம்பிருவாங்க.'

'டேய் பொறு...எனக்கு தல கிரு கிருனு சுத்துது..'

'சூப்பர்..இதான் சான்ஸ்.."Iam not doing well'னு ஒரு மெசேஜ் தட்டு.அப்புறம் பாரு...

'????????????????????'




இவண் 
- சிவன்
இவர் மேலும் கூறுகிறார் ...

16 கலந்துரையாடல்கள்

வாசகர் கேள்வி-பதில் 


 

நம்ம வலைத்தளத்தில் கேள்வி பதில் பகுதிக்கு கேள்வி அனுப்புங்கன்னு சொன்னாலுஞ்சொன்னோம்,தபால் நிலையங்களிளெல்லாம் ஒரே தள்ளு முள்ளு. உலகம்முழுவதும் கேள்விக்கணைகள் ஏவுகணைகள் போல் வந்து இறங்கியிருக்கின்றன. எத்தியோப்பியாவில் இருந்துகூட ஏழு சாக்கில் கேள்விகள் வந்திருக்கின்றன. மூட்டை மூட்டையாய் கடிதங்களை தூக்கிவந்தே அந்த தபால்காரருக்கு 'சிக்ஸ் பேக்' வந்து விட்டது. இந்த மக்களின் அறிவுப்பசிக்கு ஒரு அளவில்லாமல் போய் விட்டது. சிறப்பான கேள்விக்கு வாராவாரம் மெகா பரிசாக ரூபாய் 101 வழங்கப்படும்னு சொன்னதும் கூட காரணமாய் இருக்கலாம். இந்த வார பகுதிக்கு செல்வோம்.

1) கடவுள் இருக்கிறாரா?? இல்லையா ?? (நெடுமுடியான், திருப்பதி)

யோவ் நீ ஸ்டாம்ப் ஓட்டமா அனுப்பின லெட்டருக்கு நான் பதில் சொல்றேனே அப்பவே தெரிய வேணாம்....கடவுள் இருக்கான்யா....


2) தமன்னா அழகா? அனுஷ்கா அழகா ? நீங்களே சொல்லுங்களேன் ...??(அழகப்பன்,காரைக்குடி)

இத மெனக்கெட்டு கேள்வின்னு கேட்ருக்க பாரு நீ தாண்டா செல்லம் அழகு....


3) நான் தங்கள் வலைத்தளத்தை கடந்த முப்பதாண்டுகாளாய் படித்து வருகிறேன்.உங்களை மாதிரி ஒரு Writer தமிழகத்தில் இல்லையென்கிறேன்....சரி தானே?? (திருவள்ளுவர்,மயிலாப்பூர்)

என்ன இப்டி சொல்லிடீங்க..நம்ம R2 ஸ்டேஷன்ல ஒரு Writer இருக்காரு...சும்மா குண்டு குண்டா சூப்பரா எழுதுவாரு...உங்களுக்கு தெரியாதா...



4)கலைஞரும் கேள்விபதில் எழுதுறாரு..நீங்களும் கேள்வி பதில் எழுதுறீங்க...உங்களுக்கும் அவருக்கும் என்ன வித்யாசம்??? (ஜெயா,ஸ்ரீரங்கம்)
60வயது ...மூன்று மனைவிகள்...


5)இவ்வளவு வளங்கள் இருந்தும் இந்தியா முன்னேராததற்கு காரணம் 'கண் திருஷ்டி' தானே ??? (கேது,திருநள்ளாறு)

கரெக்டா கண்டுபுடிச்சீங்க...ஒரு ஹெலிகாப்டர்ல மிளகா அம்பது கிலோ ,எலுமிச்சை இருபது கிலோ...மஞ்சள் முப்பது கிலோனு எடுத்துகிட்டு போய் இந்தியாவையே சுத்திவந்து வங்கக்கடல்ல போட்டு காரித்துப்பீருங்க ..திருஷ்டி கழிஞ்சிரும்...


6)அது ஏன் நூறு ரூபாய் நோட்ல காந்தித்தாத்தா படம் போட்டிருக்கு??? (அருமைநாயகம்,ஆத்தூர்)

அப்புறம்..உங்க அப்புத்தா படமா போடுவாங்க....



7)கௌதம் மேனனின் அடுத்த படம் எப்போ வரும்..??(சத்யஜித்ரே,வட பழனி)

அவர் வீட்ல HBO சேனல் ரெண்டு மாதமாய் வரவில்லையாம்.அதனால் படம் தள்ளிபோகும் என்று தெரிகிறது.


8)நான் குமாரை காதலிக்கிறேன்.குமாரோ மீனாவை காதலிக்கிறான்.மீனா பாபுவை காதலிக்கிறாள்.பாபு நேத்து எனக்கு லவ் லெட்டர் கொடுத்தான். நாங்கள் இப்போ என்ன செய்ய வேண்டும்.(ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி)

ம் ...நீங்க மருந்த குடிச்சி சாக வேண்டும்...


9) நான் மிகப்பெரிய பணக்காரனாக வேண்டும் ...அதற்கு என்ன செய்ய வேண்டும்?? (முலாயம் சிங், மூணாறு)

இந்த மாதிரி வெட்டித்தனமா கேள்வி எழுதிப்போடுவதை விட்டுவிட்டு வேலை மயி&** ஒழுங்காய் பார்க்க வேண்டும்.


10)ஊழலை ஒழிக்க வேண்டும்னு நம்ம ஆ.ராசா சிறையிலேயே உண்ணாவிரதம் இருக்க போறாராமே அப்டியா???(2G.கோபாலன், பெரம்பலூர்)

பிளாஸ்டிக்க ஒழிக்கணும்னு எங்கயாச்சும் பிராய்லர்கோழி போராட்டம் பண்ணி பாத்திருக்கீங்களா???

                                                                                                                                                     ---தொடரும்


                                                                                             
இவண் 
சிவன்...
ivansivan@gmail.com

இவர் மேலும் கூறுகிறார் ...

11 கலந்துரையாடல்கள்