Iconoclast.
பொதுவாக, தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டுவரும் நம்பிக்கைகளையும், தனிநபர் வழிபாட்டையும் உடைக்கும் ஒரு நபரே Iconoclast. அதாவது, கலகக்காரர். யார் வேண்டுமானாலும் Iconoclast ஆகி விட முடியாது. இந்தியாவில், தனது சமுதாயம் தன்மீது திணிக்கும் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் சிந்தனைகளையும் கேள்விகேட்டு உடைத்து, அறிவை உபயோகித்து எது நல்லது எது கேட்டது என்று தரம்பிரித்து அறியும் திறன் உள்ள ஒருவனே Iconoclast ஆக முடியும். எத்தனை மாட்டுத்தனமான சிந்தனைகள் நம்மீது திணிக்கப்படுகின்றன இங்கே ! கலாச்சார ரீதியாக எந்த வகையிலும் ஒரு தனிமனிதன் நல்லறிவைப் பெற்றுவிடக்கூடாது என்றே இந்தியாவில் - குறிப்பாகத் தமிழகத்தில் - மீடியாவும் அரசும் மதமும் கட்சிகளும் இயங்குகின்றன. இவற்றைத் தாண்டி ஒரு மனிதன் சிந்தனை விடுதலை அடைவது மிகக்கடினம் என்றே தோன்றுகிறது.
தமிழகத்தில் சினிமா நடிகர்களே கடவுள்கள். ஒன்றுக்கும் உதவாத ஊழல் அரசியல்வாதிகளே தலைவர்கள். குப்பையான pulp நாவல்களே இலக்கியங்கள். தொலைக்காட்சியில் வரும் படு அசிங்கமான நிகழ்ச்சிகளே பொழுதுபோக்கு. ஏன் இப்படி இருக்கிறது? உலகெங்கும் உள்ள நல்ல புத்தகங்கள், சிறந்த திரைப்படங்கள், தலைசிறந்த நடிகர்கள் ஆகிய எதுவும் இங்கே உள்ளே நுழைய முடியாத சூழல். தமிழகத்தின் பெரும் பொறுப்புகளில் இருக்கும் மனிதர்களே படுமட்டமான ரசனையை உடையவர்களாகத் திகழ்கின்றனர். அப்படி இருக்கையில், இவர்கள் எங்கே நல்ல விஷயங்களைப் பரிந்துரைக்கப்போகிறார்கள்?
ஆகவேதான் நம்மால் வழிவழியாகப் பின்பற்றப்படும் நம்பிக்கைகளையும் ரசனை முறைகளையும் நாம் கேள்வி கேட்க வேண்டும். நமது மதம் இப்படிச் செய்யச் சொல்கிறதா? கேள்விகளைக் கேட்போம். ஏன் இப்படி நடக்கிறது என்று வினவுவோம். நமது மதம், குறிப்பிட்ட ஜாதியினரை அசிங்கம் என்று சொல்கிறதா? அந்த மத விதிகளை உடைப்போம். கேள்வி கேட்போம். பொதுவில், மனித ரசனை இங்கே மலையளவு மாறவேண்டியிருக்கிறது. இன்னமும் ராஜேஷ் குமார் போன்றவர்களையே சிறந்த எழுத்தாளர் என்று சொல்லும் கும்பல்தான் இங்கே அதிகம். பாலச்சந்தரே உலக இயக்குநர். கமல்ஹாசன் உலக நாயகன். இங்கே அடிமட்ட ரசனையைப் பரப்பும் எவராக இருந்தாலும், இப்படி 'உலக' என்று ஆரம்பிக்கும் ஒரு பட்டம் அவர்களுக்குத் தமிழகத்தின் ஆட்டுமந்தைகளின் சார்பில் வழங்கப்படுகிறது. பட்டம் கிடைத்ததும், அவர்கள் கடவுளர்களாக மாறிப்போனதொரு மனநிலையில் ஊறித்திளைத்து, தங்களது வழிபாட்டு முறைகளை மக்களுக்கும் எடுத்து இயம்புகின்றனர். எவ்வளவு அசிங்கம் இது !
அரசியலை எடுத்துக்கொண்டால், மக்களால் வழிபடப்பெறும் அரசியல்வாதிகளின் ரசனை எந்த நிலையில் இருக்கிறது? மானாட மயிலாட நிகழ்ச்சியைப் பரிந்துரைத்து, மக்களின் சுயமைதுன முயற்சிக்குப் பெரிதும் உதவிபுரிவதே இந்த அரசியல்வாதிகளின் முழுநேர வேலையாக இருக்கிறது. நடிகர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்? உடன் வேலை செய்யும் நடிகர்களை 'சார்... சார்' என்று அழைப்பது; அவர்களின் கால்களை நக்குவது; உலகத்தில் உள்ள அயோக்கியத்தனம் முழுவதையும் செய்வது; போர் அடித்தால் கட்சி ஆரம்பித்து விடுவது. என்ன நடக்கிறது இங்கே? எந்த நடிகராவது, இயக்குநராவது, தயாரிப்பாளராவது, நடிகையாவது இதுவரை தங்களின் ரசிகர்களை நல்ல ரசனையின்பால் திருப்பியிருக்கிறார்களா? கேடுகெட்ட மொக்கைத் திரைப்படங்களே இவர்களது பார்வையில் உலகப்படங்களாக இருக்கின்றன.
நல்ல புத்தகங்கள் எத்தனை இருக்கின்றன தமிழகத்தில். எந்த அரசியல்வாதியாவது இவற்றைப் பற்றிப் பேசி மக்களின் ரசனை முன்னேறுவதற்கு முயற்சித்திருக்கிறார்களா? இல்லையே. கருணாநிதியின் புத்தகங்களே இலக்கியம்.
இப்படித் தமிழகத்தின் கலைச்சூழல் அசிங்கப்பட்டுப் போயிருக்கும் நிலையில், நல்லவற்றைத் தேர்ந்தெடுப்பது, மக்களாகிய நமது கையில்மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் அனைவருமே Iconoclast களாக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தால் மட்டுமே மீடியா மற்றும் சமுதாயம் நம்மீது விதிக்கும் விதிகளை உடைக்க முடியும். நல்ல குடிமகனாகவும் வாழ முடியும். எதையும் எதிர்த்துக் கேள்வி கேளுங்கள் நண்பர்களே. சமூக நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் உடையுங்கள். 'தமிழனுக்கு வழிபடுவதற்கு இரண்டு செருப்புகள் எப்போதும் தேவை. செருப்பை அணிபவர்கள் மட்டும் மாறிக்கொண்டே இருப்பார்கள்' என்று ஒரு சொலவடை உண்டு. அதை உடைப்போம். தமிழகத்தில் வழிபடப்பெறும் ஸ்தானத்தில் இருக்கும் 'கடவுள்களை' உடைப்போம். கடவுளை உடைப்போம் என்றால் , உடனே சிலைகளை உடைப்பது அல்ல பொருள். அப்படி மக்களால் போற்றப்பட்டு, வழிபடப்பெற்றுக்கொண்டிருக்கும் போலிகளின் மீதான நம்பிக்கையை உடைப்போம்.
ஒரு தனிமனிதனின் ரசனை மாறினால், அவனது வாழ்வு மேம்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது சமுதாயம் தன்மீது திணிக்கும் மூடநம்பிக்கைகளை முதலில் அந்த மனிதன் தூக்கி எறிந்தாலே, அவனது ரசனை வழியை அடைத்துக்கொண்டிருக்கும் தடைகள் உடைந்துவிடும். குமாஸ்தா மனநிலை என்று ஒன்று உண்டு. மிகப்பெரும் செல்வந்தனாக ஒருவன் இருக்கலாம். ஆனால், அவனது மனதில், இன்னும் ஒரு குமாஸ்தாவின் மனநிலையை ஒத்த சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கும். அவனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லாதவாறு இந்தச் சிந்தனைகள் அவனைத் தடுக்கும். அந்தக் குமாஸ்தா மனநிலை முதலில் நம்மிடமிருந்து ஒழிய வேண்டும்.
குமாஸ்தாவாக யாரும் இருக்கலாம். அது அவரது உரிமை. ஆனால், குமாஸ்தா மனநிலையோடு இருந்துகொண்டு சகமனிதனுக்கு ஊறு விளைவிப்பது ஒரு தனிமனிதனின் உரிமை அல்ல. ரசனை மாறினால் ஒழிய, இந்த குமாஸ்தா மனநிலை நம்மை விட்டுப்போகாது.
எனது அனுபவத்தில், பலரைப் பார்த்திருக்கிறேன். ஆள் பெரிய வேலையில் இருப்பார். ஆனால், மனதில், தனது ஜாதியும் சமூகமும் தன்மீது அமுக்கிய அத்தனை சிந்தனைகளையும் வைத்துக்கொண்டு, எப்போதடா அடுத்தவன் மீது திணிக்கலாம் என்று காத்துக்கொண்டிருப்பார். அதாவது, தான் நினைக்கும்படிதான் அடுத்தவன் வாழ வேண்டும் என்று ஒரு சர்வாதிகார சிந்தனை அவர்களிடத்தில் இருக்கும். இவர்களிடம் அதிகாரம் வந்தால், இவர்களின் எண்ணத்துக்கு மாறாக நினைப்பவர்கள் காலி. நரேந்திர மோடி போல. அண்ணா ஹசாரே போல. ஹிட்லர் போல. எத்தனை பேர் இன்னமும் நம் நாட்டில் நரேந்திர மோடியை துதிபாடிக்கொண்டிருக்கிறார்கள்?
இந்தச் சூழ்நிலையில்தான் பெரியார் போல ஒரு Iconoclast நமக்குத் தேவை. பெரியாரைப் பார்த்தால், நாட்டில் பின்பற்றப்படும் அத்தனை நம்பிக்கைகளையும் எந்நேரமும் திட்டிக்கொண்டும் கேலிசெய்துகொண்டுமே இருந்திருக்கிறார். பெண் விடுதலை பற்றியும், விதவைத் திருமணம் பற்றியும், தேசாபிமானம், பாஷாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை ஒழிப்பது பற்றியும், மதம் நம்மீது திணிக்கும் அசிங்கங்கள் பற்றியும் எத்தனை முறை அவர் பேசியிருப்பார்? அதைக் கடைபிடித்தும் வாழ்ந்தார். அவர் ஒரு உண்மையான Iconoclast . ஒரு கலகக்காரர்.
அவரைப்போல், எதையும் கேள்விகேட்டு, அந்த பதில் நமது மனதில் முழுமையாகப் படிந்தால் மட்டுமே ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள நாம் பழக வேண்டும். ஒரே ஒரு விஷயம். இந்த உலகில் நாம் வாழும் வாழ்க்கையைப் போலவே, சகமனிதனுக்கும் வாழ உரிமை இருக்கிறது என்பது நம்மால் சரிவரப் புரிந்துகொண்டுவிடப்பட்டாலேயே, எவருக்கும் எந்தத் துன்பமும் விளைவிக்காமல் வாழ்ந்துவிடலாம்.
ஆகவே, நல்ரசனையோடு, விசாலமான மனதோடு, ஒரு Iconoclast ஆக வாழ்ந்து, நம்மால் முடிந்தவரை சமுதாயம் திணிக்கும் அசிங்கமான சிந்தனைகளை உடைப்போம்.
-- வீராசாமி
பொதுவாக, தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டுவரும் நம்பிக்கைகளையும், தனிநபர் வழிபாட்டையும் உடைக்கும் ஒரு நபரே Iconoclast. அதாவது, கலகக்காரர். யார் வேண்டுமானாலும் Iconoclast ஆகி விட முடியாது. இந்தியாவில், தனது சமுதாயம் தன்மீது திணிக்கும் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் சிந்தனைகளையும் கேள்விகேட்டு உடைத்து, அறிவை உபயோகித்து எது நல்லது எது கேட்டது என்று தரம்பிரித்து அறியும் திறன் உள்ள ஒருவனே Iconoclast ஆக முடியும். எத்தனை மாட்டுத்தனமான சிந்தனைகள் நம்மீது திணிக்கப்படுகின்றன இங்கே ! கலாச்சார ரீதியாக எந்த வகையிலும் ஒரு தனிமனிதன் நல்லறிவைப் பெற்றுவிடக்கூடாது என்றே இந்தியாவில் - குறிப்பாகத் தமிழகத்தில் - மீடியாவும் அரசும் மதமும் கட்சிகளும் இயங்குகின்றன. இவற்றைத் தாண்டி ஒரு மனிதன் சிந்தனை விடுதலை அடைவது மிகக்கடினம் என்றே தோன்றுகிறது.
தமிழகத்தில் சினிமா நடிகர்களே கடவுள்கள். ஒன்றுக்கும் உதவாத ஊழல் அரசியல்வாதிகளே தலைவர்கள். குப்பையான pulp நாவல்களே இலக்கியங்கள். தொலைக்காட்சியில் வரும் படு அசிங்கமான நிகழ்ச்சிகளே பொழுதுபோக்கு. ஏன் இப்படி இருக்கிறது? உலகெங்கும் உள்ள நல்ல புத்தகங்கள், சிறந்த திரைப்படங்கள், தலைசிறந்த நடிகர்கள் ஆகிய எதுவும் இங்கே உள்ளே நுழைய முடியாத சூழல். தமிழகத்தின் பெரும் பொறுப்புகளில் இருக்கும் மனிதர்களே படுமட்டமான ரசனையை உடையவர்களாகத் திகழ்கின்றனர். அப்படி இருக்கையில், இவர்கள் எங்கே நல்ல விஷயங்களைப் பரிந்துரைக்கப்போகிறார்கள்?
ஆகவேதான் நம்மால் வழிவழியாகப் பின்பற்றப்படும் நம்பிக்கைகளையும் ரசனை முறைகளையும் நாம் கேள்வி கேட்க வேண்டும். நமது மதம் இப்படிச் செய்யச் சொல்கிறதா? கேள்விகளைக் கேட்போம். ஏன் இப்படி நடக்கிறது என்று வினவுவோம். நமது மதம், குறிப்பிட்ட ஜாதியினரை அசிங்கம் என்று சொல்கிறதா? அந்த மத விதிகளை உடைப்போம். கேள்வி கேட்போம். பொதுவில், மனித ரசனை இங்கே மலையளவு மாறவேண்டியிருக்கிறது. இன்னமும் ராஜேஷ் குமார் போன்றவர்களையே சிறந்த எழுத்தாளர் என்று சொல்லும் கும்பல்தான் இங்கே அதிகம். பாலச்சந்தரே உலக இயக்குநர். கமல்ஹாசன் உலக நாயகன். இங்கே அடிமட்ட ரசனையைப் பரப்பும் எவராக இருந்தாலும், இப்படி 'உலக' என்று ஆரம்பிக்கும் ஒரு பட்டம் அவர்களுக்குத் தமிழகத்தின் ஆட்டுமந்தைகளின் சார்பில் வழங்கப்படுகிறது. பட்டம் கிடைத்ததும், அவர்கள் கடவுளர்களாக மாறிப்போனதொரு மனநிலையில் ஊறித்திளைத்து, தங்களது வழிபாட்டு முறைகளை மக்களுக்கும் எடுத்து இயம்புகின்றனர். எவ்வளவு அசிங்கம் இது !
அரசியலை எடுத்துக்கொண்டால், மக்களால் வழிபடப்பெறும் அரசியல்வாதிகளின் ரசனை எந்த நிலையில் இருக்கிறது? மானாட மயிலாட நிகழ்ச்சியைப் பரிந்துரைத்து, மக்களின் சுயமைதுன முயற்சிக்குப் பெரிதும் உதவிபுரிவதே இந்த அரசியல்வாதிகளின் முழுநேர வேலையாக இருக்கிறது. நடிகர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்? உடன் வேலை செய்யும் நடிகர்களை 'சார்... சார்' என்று அழைப்பது; அவர்களின் கால்களை நக்குவது; உலகத்தில் உள்ள அயோக்கியத்தனம் முழுவதையும் செய்வது; போர் அடித்தால் கட்சி ஆரம்பித்து விடுவது. என்ன நடக்கிறது இங்கே? எந்த நடிகராவது, இயக்குநராவது, தயாரிப்பாளராவது, நடிகையாவது இதுவரை தங்களின் ரசிகர்களை நல்ல ரசனையின்பால் திருப்பியிருக்கிறார்களா? கேடுகெட்ட மொக்கைத் திரைப்படங்களே இவர்களது பார்வையில் உலகப்படங்களாக இருக்கின்றன.
நல்ல புத்தகங்கள் எத்தனை இருக்கின்றன தமிழகத்தில். எந்த அரசியல்வாதியாவது இவற்றைப் பற்றிப் பேசி மக்களின் ரசனை முன்னேறுவதற்கு முயற்சித்திருக்கிறார்களா? இல்லையே. கருணாநிதியின் புத்தகங்களே இலக்கியம்.
இப்படித் தமிழகத்தின் கலைச்சூழல் அசிங்கப்பட்டுப் போயிருக்கும் நிலையில், நல்லவற்றைத் தேர்ந்தெடுப்பது, மக்களாகிய நமது கையில்மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் அனைவருமே Iconoclast களாக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தால் மட்டுமே மீடியா மற்றும் சமுதாயம் நம்மீது விதிக்கும் விதிகளை உடைக்க முடியும். நல்ல குடிமகனாகவும் வாழ முடியும். எதையும் எதிர்த்துக் கேள்வி கேளுங்கள் நண்பர்களே. சமூக நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் உடையுங்கள். 'தமிழனுக்கு வழிபடுவதற்கு இரண்டு செருப்புகள் எப்போதும் தேவை. செருப்பை அணிபவர்கள் மட்டும் மாறிக்கொண்டே இருப்பார்கள்' என்று ஒரு சொலவடை உண்டு. அதை உடைப்போம். தமிழகத்தில் வழிபடப்பெறும் ஸ்தானத்தில் இருக்கும் 'கடவுள்களை' உடைப்போம். கடவுளை உடைப்போம் என்றால் , உடனே சிலைகளை உடைப்பது அல்ல பொருள். அப்படி மக்களால் போற்றப்பட்டு, வழிபடப்பெற்றுக்கொண்டிருக்கும் போலிகளின் மீதான நம்பிக்கையை உடைப்போம்.
ஒரு தனிமனிதனின் ரசனை மாறினால், அவனது வாழ்வு மேம்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது சமுதாயம் தன்மீது திணிக்கும் மூடநம்பிக்கைகளை முதலில் அந்த மனிதன் தூக்கி எறிந்தாலே, அவனது ரசனை வழியை அடைத்துக்கொண்டிருக்கும் தடைகள் உடைந்துவிடும். குமாஸ்தா மனநிலை என்று ஒன்று உண்டு. மிகப்பெரும் செல்வந்தனாக ஒருவன் இருக்கலாம். ஆனால், அவனது மனதில், இன்னும் ஒரு குமாஸ்தாவின் மனநிலையை ஒத்த சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கும். அவனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லாதவாறு இந்தச் சிந்தனைகள் அவனைத் தடுக்கும். அந்தக் குமாஸ்தா மனநிலை முதலில் நம்மிடமிருந்து ஒழிய வேண்டும்.
குமாஸ்தாவாக யாரும் இருக்கலாம். அது அவரது உரிமை. ஆனால், குமாஸ்தா மனநிலையோடு இருந்துகொண்டு சகமனிதனுக்கு ஊறு விளைவிப்பது ஒரு தனிமனிதனின் உரிமை அல்ல. ரசனை மாறினால் ஒழிய, இந்த குமாஸ்தா மனநிலை நம்மை விட்டுப்போகாது.
எனது அனுபவத்தில், பலரைப் பார்த்திருக்கிறேன். ஆள் பெரிய வேலையில் இருப்பார். ஆனால், மனதில், தனது ஜாதியும் சமூகமும் தன்மீது அமுக்கிய அத்தனை சிந்தனைகளையும் வைத்துக்கொண்டு, எப்போதடா அடுத்தவன் மீது திணிக்கலாம் என்று காத்துக்கொண்டிருப்பார். அதாவது, தான் நினைக்கும்படிதான் அடுத்தவன் வாழ வேண்டும் என்று ஒரு சர்வாதிகார சிந்தனை அவர்களிடத்தில் இருக்கும். இவர்களிடம் அதிகாரம் வந்தால், இவர்களின் எண்ணத்துக்கு மாறாக நினைப்பவர்கள் காலி. நரேந்திர மோடி போல. அண்ணா ஹசாரே போல. ஹிட்லர் போல. எத்தனை பேர் இன்னமும் நம் நாட்டில் நரேந்திர மோடியை துதிபாடிக்கொண்டிருக்கிறார்கள்?
இந்தச் சூழ்நிலையில்தான் பெரியார் போல ஒரு Iconoclast நமக்குத் தேவை. பெரியாரைப் பார்த்தால், நாட்டில் பின்பற்றப்படும் அத்தனை நம்பிக்கைகளையும் எந்நேரமும் திட்டிக்கொண்டும் கேலிசெய்துகொண்டுமே இருந்திருக்கிறார். பெண் விடுதலை பற்றியும், விதவைத் திருமணம் பற்றியும், தேசாபிமானம், பாஷாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை ஒழிப்பது பற்றியும், மதம் நம்மீது திணிக்கும் அசிங்கங்கள் பற்றியும் எத்தனை முறை அவர் பேசியிருப்பார்? அதைக் கடைபிடித்தும் வாழ்ந்தார். அவர் ஒரு உண்மையான Iconoclast . ஒரு கலகக்காரர்.
அவரைப்போல், எதையும் கேள்விகேட்டு, அந்த பதில் நமது மனதில் முழுமையாகப் படிந்தால் மட்டுமே ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள நாம் பழக வேண்டும். ஒரே ஒரு விஷயம். இந்த உலகில் நாம் வாழும் வாழ்க்கையைப் போலவே, சகமனிதனுக்கும் வாழ உரிமை இருக்கிறது என்பது நம்மால் சரிவரப் புரிந்துகொண்டுவிடப்பட்டாலேயே, எவருக்கும் எந்தத் துன்பமும் விளைவிக்காமல் வாழ்ந்துவிடலாம்.
ஆகவே, நல்ரசனையோடு, விசாலமான மனதோடு, ஒரு Iconoclast ஆக வாழ்ந்து, நம்மால் முடிந்தவரை சமுதாயம் திணிக்கும் அசிங்கமான சிந்தனைகளை உடைப்போம்.
-- வீராசாமி